வாழ்க இந்தியா!!( அரசியல்வாதியும், பணக்காரர்களும் மட்டும்)

இந்தியா 15வது மக்களவைக்கான் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சமயத்தில் தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்க்காக அரசியல் கட்சிகள் செய்யும் செலவுகள் பிரச்சாரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செலவுகள் ரூ10,000 கோடியை தாண்டும் என செய்திகள் வருகின்றன. பல அரசியல் கட்சிகள் தேர்தலில் செய்யும் செலவுகள் கோடிக்கணக்கில் தேர்தல் ஆணையம் எத்தனை சட்டம் போட்டாலும் செலவுகளை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை. பெரும்பாலன அரசியல் கட்சிகள் தேர்தல் செலவை முதலீடாகவும் அரசதிகாரம் கிடைத்தபின்பு மக்களுக்கு செல்லவேண்டிய பணத்தை அறுவடைசெய்துகொள்கிறார்கள். இந்தியாவில் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதியின் முக்கிய ஊற்று நாட்டின் பெருமுதலாளிகள். சமீபத்தில் FICCI மற்றும் ASSOCHEM போன்ற கூட்டமைப்புகள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தேர்தல் நிதி சம்பந்தமாக கடிதம் எழுதியுள்ளனர். அதாவது தாங்கள் கட்சிகளுக்கு அளிக்கின்ற தேர்தல் நிதி வெளிப்படையாக இருக்கவேண்டுமாம் அதனால் அமெரிக்காவைப் போன்று Polical Action Commitee (PAC) ஏற்படுத்தி அதன் மூலம் கட்சிகள் பெறும் வாக்குவிகித அடிப்படையில் நிதியை பிரித்துத்தரப்படவேண்டுமாம்.

முதலில் இந்திய ஜனநாயகத்தின் மீதும் தேர்தல் மீதும் ஏன் இந்த முதலாளித்துவ அமைப்புகள் அக்கறை கொள்கின்றனர். மேலும் அரசியல் கட்சிகளுக்கு இவர்கள் ஏன் நிதி அளிக்கவேண்டும் என கேள்விஎழுகிறது. அரசியல் கட்சிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவு என்ன? இந்திய நாட்டில் செயல்படும் அரசியல் கட்சிகள் மக்களுக்காக நாட்டின் பெரும்பான்மை மக்களின் நலன்களைக் காக்க மட்டும் செயல்படுமேயானால் கார்ப்பரேட்டுகள் தரும் தேர்தல் இன்னபிற நிதியை ஏற்கக்கூடாது. இந்திய நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு அரசியல் கட்சிகள் செயல்படும் விதம் பற்றி அறியாமல் உள்ளனர். அரசியல் ஒரு சாக்கடை என்று பலரும் ஒதுங்கியிருப்பதால் பல அரசியல் கட்சிகள் மகிழ்ச்சிகொள்கின்றன. கேள்வி கேட்காதவரை அவர்களுக்கு பிரச்சனையில்லை,ஊடகங்களும் மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதில் ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் DNA என்ற அமைப்பு இந்தியாவில் தேர்தல் நிதி என்ற பெயரில் அரசியல் கட்சிகள் நாட்டிம் பெருமுதலாளிகளிடம் பெற்ற நிதி விவரங்களை வெளியிட்டுள்ளது, இந்தியாவில் CPI-M,CPI கட்சிகள் தவிர மற்ற எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் நிதியை பெருமுதலாளிகளிடமிருந்து பெற்றுள்ளன. சென்ற ஆண்டில் அரசியல் கட்சிகளின் வருமானவரி தாக்கல் வெளிப்படையாக கொடுக்க CPI-M &CPI தவிற எல்லா அரசியல் கட்சிகளும் மறுத்துவிட்டன.http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=c588cb0c-1450-43a8-8a3c-72f1c0972e8c

சமீபத்தில் பாஜக வின் தில்லி அலுவலகத்தில் ரூ2.6 கோடி பணம் களவுபோய்விட்டதாக செய்தி வந்தது ஆனால் புகார் எதுவும் செய்யவில்லை ஏனென்றால் அது கள்ளப்பணம் கணக்கில் வராத பணம் திருடியவனை சட்டபூர்வமாக ஒன்றும் செய்ய முடியாமல் திருடனுக்கு தேள்கொட்டிய கதையாகிவிட்டது.

பெரிய தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் 2003-2007 இடைப்பட்ட காலத்தில் மட்டும் தலா ரூ 52 கோடிக்கும் மேல் பெற்றுள்ளனர். இப்படி பெறப்பட்ட நிதிக்கு எவ்வாறு கைமாறு செய்கிறார்கள்? கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் வாஜ்பாயி தலைமையிலான ஆட்சியிலும் தற்போது நடைபெற்றுவரும் மன்மோகன் ஆட்சியிலும் முன்னெப்பபோதும் இல்லாத அளவிற்கு நாட்டில் உலகமயத்தின் பெயரால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன, நாட்டில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தங்கள் மூலதனத்தை பல மடங்கு பெருக்கியுள்ளனர்.ஆசியாவிலேயே இந்தியாவில் தான் அதிக பண்க்காரர்கள் உள்ளனர் வறுமைக்கோடிற்கும் கீழேயும் அதிக மக்கள் நம் நாட்டில் தான் உள்ளனர். நாட்டின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில் நமது நிதியமைச்சர் பெருமுதலாளிகளிடம் கலந்தாலோசிக்காமல் முடிவெடுப்பதில்லை.வரிஏய்ப்பை மறைக்கவும்,வரிபாக்கிவைப்பவர்களைக் காப்பற்றவும் வராக்கடன்களின் மேல் நடவடிக்கை எடுக்காமலிருக்கவும் தனியார்மயமாக்கத்தில் கருணை காட்டுவதிலும் இன்னபிற விசயங்களில் கைமாறு செய்யப்படுகிறது.

2003 முதல் 2007 வரை நிதியளித்த முக்கிய நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும்.http://www.dnaindia.com/report.asp?newsid=1236392

ஆதித்ய பிர்லா-
காங்கிரசுக்கு- ரூ 21.71 கோடி
பாஜகவிற்கு- ரூ 2.96 கோடி

ஸ்டெர்லைட் குழுமம்
பாஜகவிற்கு- ரூ 9.5 கோடி (2000ம் ஆண்டில் BALCO நிறுவனத்தின் 51% பங்குகளை பெற்ற போது காங்கிரசிற்கு ரூ 1 கோடியும் பாஜகவிற்கு ரூ 50 இலட்சமும் தரப்பட்டது)

வீடியோகான்
காங்கிரசுக்கு- ரூ 4.50 கோடி
பாஜகவிற்கு- ரூ 3.50கோடி
சிவசேனாவிற்கு ரூ 2.63 கோடி

டாடா
காங்கிரசுக்கு- ரூ 4.32 கோடி
பாஜகவிற்கு- ரூ 2.67 கோடி
சிவசேனாவிற்கு ரூ 60.94 இலட்சம்
தெலுங்கு தேசத்திற்கு ரூ48.48 இலட்சம்

அதானி குழுமம்(குஜராத்)
பாஜகவிற்கு- ரூ 4 கோடி
காங்கிரசுக்கு- ரூ 20 இலட்சம்

ஐடிசி
காங்கிரசுக்கு- ரூ 1.45 கோடி
பாஜகவிற்கு- ரூ 1.38 கோடி
சிவசேனாவிற்கு ரூ 12 இலட்சம்
சமாஜ்வாதி கட்சிக்கு ரூ36இலட்சம்
தெலுங்கு தேசத்திற்கு ரூ 14.5 இலட்சம்
ஐக்கிய ஜனதாதள் - ரூ8 இலட்சம்
அதிமுகவிற்கு - ரூ 5 இலட்சம்

எல்&டி குழுமம்
காங்கிரசுக்கு- ரூ 1 கோடி
பாஜகவிற்கு- ரூ 1.60 கோடி
சிவசேனாவிற்கு ரூ 35 கோடி

மஹிந்திரா குழுமம்
ரூ 2.20 கோடியை காங்கிரஸ், பாஜக சிவசேனா மற்றும் தெலுங்கு தேசத்திற்கு பிரித்துக்கொடுத்துள்ளது.

பாஜாஜ்
பாஜகவிற்கு- ரூ 1 கோடி
காங்கிரசுக்கு- ரூ 1 கோடி

ஜிண்டால்
காங்கிரசுக்கு- ரூ 1 கோடி
பாஜகவிற்கு- ரூ 75 இலட்சம்

ஜிஎம்ஆர் குழுமம்
பாஜகவிற்கு- ரூ 1 கோடி
காங்கிரசுக்கு- ரூ 25 இலட்சம்

விஜய் மல்லயா
பாஜகவிற்கு- ரூ 1 கோடி (2004-05 வருடம்)

அம்பானிகள் “அளி”த்ததைப்பற்றி தகவல் இல்லாவிட்டாலும் பெரிய டோனர்களாக அவர்கள் தான் இருப்பார்கள்.

பாமக வும் ரூ2.86 கோடியை பெற்றுள்ளது யாரிடமிருந்து என் தெரியவில்லை.

இந்தப்பட்டியல் நீண்டுகொண்டேயிருப்பதால் தயைகூர்ந்து இணைத்துள்ள லிங்கைப் படிக்கவும்

source : http://arivoliiyakkam.blogspot.com/2009/03/blog-post_12.html

Comments