ஓசைப்படாமல் வரும் சர்க்கரை நோயும் , இதய நோயும் !!!

சர்க்கரை நோயும் சரி, இதய நோயும் சரி, ஓசைப்படாமல் தான் வரும். எப்போது வரும், யாருக்கு வரும் என்பதே சொல்ல முடியாது. பல சிம்பிளான அறிகுறிகளை டாக்டர்கள் சொல்லத்தான் செய்கின்றனர். ஆனால், பலரும், "வரும் போது வரட்டும்;பார்த்துக் கொள்ளலாம்' என்று கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.


ஷுகர்! ஒரு விளக்கம்:


உடலுக்கு க்ளூக்கோஸ் என்பது, எரிசக்தி போல; பைக்குக்கு பெட்ரோல் போடுவதுபோல!


ஆம், க்ளூக்கோஸ் , உடலுக்கு தேவையான ஒன்று தான். ஆனால், அதுவே அதிகமானாலோ ஆபத்து தான். கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது தான் சர்க்கரை வியாதி உருவாகிறது.


இனி படத்தை பாருங்கள்:


1. சாப்பிடும் போது உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் செல்லும் உணவு, உள்ளே நொறுக்கப்பட்டு க்ளூக்கோஸ் ஆக பிரிகிறது.


2. உணவில் இருந்து பிரிந்த க்ளூக்கோஸ், ரத்தத்தில் சேர்கிறது. ரத்தம் மூலமாக , செல்களுக்கும், மற்ற உறுப்புகளுக்கும் க்ளூக்கோஸ் செல்கிறது.


3. இன்சுலின் - உடலில் உள்ள கணையத்தில் உள்ள சுரப்பி தான்இன்சுலினை தடையில்லாமல் சுரக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மிகாமல் கட்டுப் படுத்தும் பணி இதனுடையது.


4. ரத்தத்தில் எப்போதெல்லாம் க்ளூக்கோஸ் அளவு அதிகமாகிறதோ, அப்போது தானாகவே, கணையத்தில் உள்ள சுரப்பி தானியங்கி வேலை செய்து இன்சுலினை சுரக்கும். அப்படி சுரந்து, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.


5. கணையத்தில் உள்ள சுரப்பியால், இன்சுலின் சுரக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ, போதுமான அளவில் சுருக்க முடியாமல் போனாலோ, அப்படியே இன்சுலின் சுரந்து, அதை பயன்படுத்திக்கொள்ள முடியா நிலை ஏற்பட்டாலோ ஏற்படுவது தான் சர்க்கரை வியாதி.


6. டைப் - 1 ஷுகர் : ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து விட்டால், உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி பலவீனம் அடைகிறது. அப்போது கணையத்தில் உள்ள சுரப்பி செயலிழக்கிறது. இன்சுலின் சுரப்பது நிற்கிறது. இது தான் டைப் 1 ஷுகர்.


7. டைப் - 2 ஷுகர் : இன்சுலின் சுரந்தும், அதை உடல் ஏற்றுக்கொள்ளாமல் பாதிக்கப்படுவது தான் இது. இதனால், உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.


8. கல்லீரல், வயிற்றுக்கு பின் பகுதியில் உள்ள கணையம். அங்கிருந்து தான் இன்சுலின் சுரப்பி செயல்படுகிறது.




மேலும் தகவல்களுக்கும், உடல் எடையை எளிதில் குறைப்பதற்கும்.. அழைக்கவும்.. 
+91 96009 9 25 25

Comments