பேசுவதால் என்ன ??

அளவுக்கு அதிகமாக பேசுபவர்கள்,
வெறுப்பு நிறைந்தவர்கள்,
எதிலும் திருப்தியற்றவர்கள்,
எதற்கும் சிடுசிடுத்துக் கொண்டு பேசுபவர்கள்,
எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுபவர்கள்,
பிறரை சுரண்டி வாழ்பவர்கள்,
பொறாமை எண்ணம் கொண்டவர்கள்,

இந்த ஏழு வகையான மனிதர்களும் ஒரு நாளும் மனநிம்மதியுடன் வாழமாட்டார்கள். உணர்வுகளால் இழுக்கப்பட்ட இவர்களுக்கும், மிருகங்களுக்கும் வேறுபாடு கிடையாது.

மிருகங்கள் கூட தங்களுக்கு ஆபத்து வரும் போது மட்டுமே தங்களை தற்காத்துக் கொள்ள தப்பியோட வழி இல்லாமற் போனால் மட்டுமே தாக்குதல் தொடுக்கின்றன. ஆனால் மனிதனுக்கு கோபமூட்ட சீற்றத்தால் எதிரி மீது தைநீட்டச் செய்ய ஒரு தவறான வார்த்தைப் பிரயோகம் போதும்.

"சித்தம் எவ்வளவு தான் பக்குவப்பட்டாலும், ரத்தம் பேசத் தொடங்கும் போது - மொத்த ஞானமும் கெட்டுப் போகிறது" – என்கிறார் கண்ணதாசன்.

சண்டை போட்டுக் கொண்டே இருந்தால், விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தால் நமக்குள் நிம்மதி இருக்காது. போராட்டம் பண்பைப் போக்கி வாழ்வைப் பாழாக்கி விடும். சண்டையினால் விபரீதங்கள் தான் தான் ஏற்படும். பொருள், உறவு, அன்பு, ஆகியவை ஒழிந்துப் போகும்.

சண்டைகளும், கோபமான விவாதங்களும், மனிதனின் மூளையின் அதிர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.

மனிதன் சாதாரண நிலையில் விழித்திருந்து செய்யும் செயல்களான நடத்தல், பேசுதல், கேட்டல், எழுதுதல், உண்ணுதல், என்னும் ஐம்புலன்களால் காரியங்கள் செய்யும் போது நம்மூளை வினாடிக்கு 13 - அதிர்வுகளோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

குரலை உயர்த்திப் பேசும் போது 14- ல் இருந்து 16 - ஆக உயரும்.

சூடான வாதப்பிரதிவாதங்கள் சண்டை என்ற நிலையில் அதிர்வுகள் வினாடிக்கு 17 - ல் இருந்து 20 - ஆக அதிர்வு உயரும்.

மிகவும் மனஉளைச்சலில் இருக்கும் போது மனக்குழப்பத்தில் இருக்கும் போதும் 21 - லிருந்து 32 - அதிர்வுகளாகி 32 - அதிர்வுகளைத் தாண்டும் போது பைத்தியம் என்ற நிலை ஏற்படும்.

உணர்ச்சி வசப்படும் போது மூளையின் அதிர்வுகள் அதிகரிக்கும் போது
ரத்த அழுத்தம் அதிகமாகிறது. ரத்த அழுத்தம் அதிகமாகும் போது நெஞ்சு வேகமாகத் துடிக்க ஆரம்பிக்கிறது, பேச்சு குளறுபடியாகிறது. உடல் முழுவதும் சூடாகிறது. உடல் நடுக்கம் ஏற்படுகிறது. மொத்தத்தில் சமநிலை தவறுகிறது.

இந்த சமயங்களில் மனப்புழுக்கத்தை வெளிக்காட்ட முடியாமல் உள்ளேயே வைத்து மருகும் நிலையில் இன்னும் தீவிரமாகி உடல் நிலை பாதிக்கப்பட்டு பி.பி, சர்க்கரை வியாதி, ஆஸ்துமா ஏற்படுகிறது என்று மனத்ததுவ நிபுணர்கள் நம்மை எச்சரிக்கிறார்கள்.

ஆகைகயால் மனம் பாதிக்காத வண்ணம் இருப்பதற்கு கையாளப்படும் வழிகளுக்குள் பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

மற்றவர்களுடன் பழகும் போது தான் நாம் நடைமுறை வாழ்க்கைக் கல்வியை கற்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். பேசுவது, கேட்பது, சிரிப்பது, கோபப்படுவது, அழுவது, பயப்படுவது, சோர்வது, போன்ற பல செயல்களை நாம் பிறருடன் பழகும் போது சூழ்நிலைக்கு ஏற்ப செய்கிறோம்.

இவற்றை உணர்ந்து கொள்ள முடிந்தாலும் மிகச் சிலரால் தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பது நமக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால் நம்முடைய பேச்சக்கள் நம் கட்டுப்பாட்டுக்கள் இருக்க வேண்டிய விஷயம் என்பதை மறந்து விடக்கூடாது.

பேச்சுக்களைப் பற்றி ஞானிகள் பல கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்:

*** "பேச்சை விட செயலுக்கே வலிமை அதிகம்".

*** "சபையில் நீங்கள் கடைசி பெஞ்சில் போய் யாரும் அறியாமல் உட்கார்ந்து விட்டு வரவேண்டும் என்றால் யாரும் உங்களைக் கண்டுக் கொள்ளப் போவதில்லை. இது எனக்கு அதிகம் தெரியாது என்று பேச ஆரம்பித்தீர்களானால் நீங்கள் அடக்கத்திற்கு கூறினாலும் உலகம் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றே எடுத்துக் கொள்ளும். நீங்கள் உங்களை எப்படி மதிப்பப் போடுகிறீர்களோ அது போல் தான் உங்களையும் மதிக்கும். இது உலக இயல்பு." - ( மனோதத்துவ அறிஞர்கள்.)

*** "பேசாதீர்கள் செயல்படுங்கள்.
அறிவிக்காதீர்கள் செய்து முடியுங்கள்."

*** "நாம் எதை உள்ளே போடுகிறோம் என்பது முக்கியம் அல்ல.உள்ளிருந்து பேச்சியினாலும் நடவடிக்கையினாலும் எதை வெளியே விடுகிறோம் என்பது தான் முக்கியம்". – ( காந்தியடிகள் )

*** "நமது அடிப்படைப் பலவீனம் எதுவுமே நம்முடைய வெறும் தோற்றத்தின் மூலம் வெளியாகி விடுவதில்லை. நம்முடைய செயல்களால் கூட அவை அவ்வளவாக வெளிப்பட்டு விடுவதில்லை. நம்முடைய பேச்சுக்களால் தான் வெளிப்படுத்தப்படுகின்றன."

*** "மனிதனிடம் இருவகை வெளிப்பாடுகள் உண்டு. ஒன்று பேச்சு – மற்றது செயல். ஒன்றில் கவனம் செலுத்துகிறவர்கள் மற்றதைக் கோட்டை விட்டு விடுவார்கள். தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் - சாதிப்பவர்கள் பேசுவதில்லை.பேசுபவர்கள் சாதிப்பதில்லை."

*** "புகைப்பிடிப்பவனை உன் வீட்டிற்குள் அனுமதி.

மது அருந்துபவர்களைக் கூட அனுமதி, ஆனால்

அதிகம் பேசுகிறவனை அனுமதித்து விடாதே."

*** "குழப்பமுள்ள பேச்சு –குழப்பம் நிறைந்த மனதிலிருந்து புறப்படுகிறது. அதேப்போல் குழப்பமாக கோபமாக இருக்கும் போது, தளர்ந்து உடல் ஓய்ந்து இருக்கும் போது, நிலைமை நெருக்கடியாக இருக்கும் போதெல்லாம் நாம் அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது. நெருக்கடியின் சமீபம் நம் பார்வையின் தெளிவைப் பாதிக்கும். அச்சமயங்களில் சில மணிநேரம் கழித்து விஷயங்களை அணுகும் போது நமக்கு ஒரு நிதானம் ஏற்படுகிறது. பேச்சும் தெளிவாக வருகிறது." (மனதத்துவ அறிஞர்கள்)

*** "கண்ணெதிரில் உரிய நபர் இல்லையென்றவுடனெயே கருத்துச் சுதந்திரத்தோடு பேச ஆரம்பித்து விடுவது மனித இயல்பு. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நமது மனம் ஒன்றை எண்ணுகிறது. வாய் வேறொன்றைப் பேசுகிறது. செய்யும் காரியமோ வேறொன்றாக இருக்கிறது. அதாவது-நம் மனம் மொழி மெய்களுக்குள் ஒருமைப்பாடு இல்லை. இம்முரண்பாடு தான் மனிதவர்க்கத்தின் பலவீனத்திற்கே அடிப்படைக் காரணம். பலவீனத்திலிருந்தே நமது துன்பங்கள் அனைத்தும் விளைகின்றன."

*** "ஒப்பிட்டுப் பார்பது, பகுத்துப்பார்ப்பது, நடுநிலையுடன் ஆராய்வது, மதிப்பிடுவது, ஏற்றுக் கொள்வது, தீர்மானிப்பது, என்ற வகையில் சுய அறிவுடன் தேவையான நேரத்தை சிந்தனைக்கென்று செலவழித்தால் நம்மிடமுள்ள முரண்பாடுகளை நம்மால் நிச்சயம் வெல்ல முடியும். எண்ணமும் பேச்சும் செயலும் ஒன்றுபடும் போது நம் வெற்றி பலமடங்காகிறது, உயர்வது எளிதாகிறது."

*** "நம்மைப்பற்றி நாமே உயர்வாக எண்ணிக் கொள்கிறோம். அல்லது நம்மைப்பற்றி நாமே மற்றவர்களிடம் உயர்வாக பேச முற்படுகிறோம் என்றால், நம்முடைய பலவீனத்தை அதாவது தாழ்வுநிலையை மூடிமறைக்கும் ஒரு முயற்சியாகத்தான் அது இருக்கும்."

*** "யார் பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல.

என்ன பேசுகிறார்கள் என்பது தான் முக்கியம்."

*** "தெளிவான பேச்சு தூய்மையான உள்ளத்தின் எதிரொலி".
(வில்லியம் லா. 1686 – 1781)

*** "எவரிடம் பேசுகிறோம், எவரைப்பற்றி பேசுகிறோம், எப்படிப் பேசுகிறோம், எப்பொழுது பேசுகிறோம், எங்கு பேசுகிறோம் என்பதில் விழிப்பாக இருந்தால் கவலைப்பட வேண்டி இருக்காது." - (நோரிஸ்)



Source : http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=04&article=390

Comments

  1. என்ன பேசறதுன்னே தெரியல தல..

    ReplyDelete

Post a Comment

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!

use tamileditor.org for post you comments in TAMIL.